Followers

Thursday, April 11, 2019

இராகு & கேது


வணக்கம்!
          நம்முடைய அம்மன் கோவில் கட்டும் பணி என்பது பலரின் முயற்சியால் அது கைகூட வருகின்றது. உண்மையில் சொல்லபோனால் நான் எதிர்பார்த்த நபர்களை விட புதிய நபர்கள் நல்ல முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன். அம்மனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். அனைவரும் தங்களின் உழைப்பை இதில் போடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு சிலர் கோவிலுக்கு சென்றால் உடனே நடந்துவிடுகின்றது. ஒரு சிலர் கோவிலுக்கு சென்றால் ஒன்றுமே நடப்பதில்லை. இது அனைத்தும் மூன்றாவது வீட்டில் அமர்ந்து இருக்கும் கிரகத்தின் பார்வை ஒன்பதாவது வீட்டை பார்ப்பதாலும் இருக்கின்றது.

கேது மற்றும் இராகு கிரகம் மூன்று மற்றும் ஒன்பதில் அமரும்பொழுது அவர்கள் அலைந்துக்கொண்டே இருப்பார்கள் ஆனால் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு அருள் கிடைக்காமல் இருக்கும். பல வருட முயற்சிக்கு பிறகு அவர்களுக்கு அருள் கிடைப்பது போன்ற ஒரு நிலை உருவாகும்.

மூன்றில் அமர்ந்த கேதுவால் நமக்கு நிம்மதியே கிடைக்காதா என்று கேட்கலாம். கண்டிப்பாக உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உங்களின் தேடுதலை பொறுத்து இந்த நிம்மதி கிடைக்கும்.

இன்றைக்கு இருக்கும் ஆன்மீகவாதிகளுக்கு பெரும்பாலும் இந்த தோஷம் இருக்கின்றது. இதனை அவர்கள் ஆன்மீக தேடுதல் வழியாக அதற்கு தீர்வை கண்டு இருக்கின்றனர் என்பது தான் உண்மையான ஒரு விசயம் ஆனால் யாரும் இதனை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

கேது மூன்றில் அமர்ந்தால் ஆன்மீக தேடுதல் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அவர்களின் உடலை நல்ல முறையில் பராமரிப்பதையும் ஒருவர் செய்து வரவேண்டும். ஒரு சில காலக்கட்டங்களுக்கு பிறகு அவர்களுக்கு உடல் ஒத்துழைப்பதில்லை. இதனையும் நன்கு சிந்தித்து உடலை சரியாக பராமரித்து வரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: