Followers

Tuesday, April 16, 2019

மூன்றாவது வீடு தரும் தைரியம்


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைபற்றி எழுதியவுடன் பல பேர் தங்களின் ஜாதகத்தை அனுப்பி பலனை கேட்டுக்கொள்கின்றனர். பலர் இப்படிப்பட்ட பிரச்சினை வைத்துக்கொண்டு தான் வாழ்க்கையை எதிர்க்கொள்கின்றனர் என்று தெரியவருகின்றது.

நாம் முடிந்தவரை நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்க நிறைய வழிபாடு சின்ன சின்ன பரிகாரத்தை எல்லாம் நீங்கள் செய்துக்கொண்டு அதனை சரி செய்யவேண்டும். நாம் கோவிலுக்கு செல்லும்பொழுது கூட இந்த எண்ணம் இருக்கவேண்டும் என்னுடைய தோஷம் நீங்கி நல்ல வாழ்க்கையை தரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கண்டிப்பாக உங்களின் தோஷம் நீங்கும்.

மூன்றாவது வீடு தைரியம் என்ற ஒரு காரத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றது. மூன்றாவது வீடு தைரியத்தை வெளிப்படுத்தினால் அந்த நபர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். பலருக்கு பயத்தால் தான் பல வெற்றிகள் வருவதில்லை. தைரியமாக இருக்கும் ஒருவர் சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு தேவையானதை பெற்றுவிடுவார்கள்.

தைரியம் என்பது செயல்பாட்டில் காட்டவேண்டும். ஒரு சிலரை நான் பார்த்து இருக்கிறேன். நான் எதற்கும் பயப்படமாட்டேன் என்று அனைவரையும் எதிர்த்துக்கொண்டு இருப்பார்கள். அனைவரையும் எதிர்ப்பதால் அவர்களுக்கு வரவேண்டிய நல்ல வாய்ப்பு என்பது கிடைக்காமல் போய்விடுகின்றது.

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் அமர்ந்தால் அவர்கள் தைரியமாக இருப்பார்கள் அதே நேரத்தில் அவர்களின் தைரியம் அவர்களின் செயல்களில் மட்டுமே இருக்கவேண்டுமே தவிர மனிதர்களிடம் காட்டவே கூடாது. நான் தைரியமாக இருப்பேன் என்று மனிதர்களிடம் காட்டினால் நல்ல வாய்ப்பு கை நழுவி போய்விடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: