Followers

Monday, April 29, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
                    பெரும் முயற்சியில் நாம் தற்பொழுது இயங்கிக்கொண்டு இருக்கிறோம். நிறைய வேலைகளை எடுத்துபோட்டு செய்கிறோம். அம்மன் கோவில் கட்டுமானபணியை ஆரம்பிக்கவேண்டும்.  அம்மன் கோவில் கட்டும்பணிக்கு என்று மூலப்பொருட்களை இறக்கிக்கொண்டு இருக்கிறோம். பல வேலைகள் செய்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொன்றாக அதனை செய்யும்பொழுது தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். அம்மன் கோவில் கட்டும்பணிக்கு தங்களால் முடிந்தவரையிலும் உதவி செய்யுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மூன்றாவது வீட்டின் பலனை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்பவர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பி ஆலோசனை கேட்க சொல்லிருந்தேன். பலருக்கு பலனை சொல்லிவிட்டேன். இன்னமும் நிறைய பேர்கள் இதுவரை ஜாதகத்தை அனுப்பி கேட்கவில்லை என்று தோன்றுகிறது. அனைவரும் தங்களின் ஜாதகத்தை அனுப்பி இலவச ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.

மூன்றாவது வீட்டிற்க்கு எளிமையாக இருந்தால் அதாவது ஜாதகத்தில் பெரிய பாதிப்பு வரவில்லை என்றால் அவர்களுக்கு எளிமையான பரிகாரத்தை பரிந்துரை செய்து இருக்கிறேன். ஒரு சிலருக்கு மட்டும் குறிப்பாக மூன்றாவது வீட்டில் பெரிய பாதிப்பு வரும் நபர்களுக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். அதற்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி செய்துக்கொள்ளலாம் அல்லது நேரில் வந்து செய்துக்கொள்ளலாம் என்று சொல்லிருக்கிறேன்.

நம்மால் முடிந்தவரை அனைத்தும் எளிமையான நீங்களே செய்யகூடிய வகையில் பரிகாரத்தை சொல்லுவது உண்டு. ஒரு சிலருக்கு அதனால் பாதிப்பு அதிகம் என்று தெரிந்தால் அதற்கு பரிகாரம் செய்யவேண்டும். கிரகங்களை சாந்தப்படுத்திக்கொள்ளும் பரிகாரத்தை செய்யவேண்டும். இதனை அலட்சியம் செய்யாமல் பரிகாரத்தை  செய்துக்கொள்ளுங்கள்.

மந்தமாக செயல்படும் நிலை ஒரு சிலருக்கு மூன்றாவது வீட்டால் வருகின்றது. நல்ல மூளையாக இருந்தாலும் அவர்கள் செயல்பாடு பெரியளவில் இருக்காது. இவர்கள் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போன்று இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் சனிக்கிரகம் மற்றும் இராகு கேது அமர்ந்து இருக்கும். 

இவர்கள் தங்களின் வாழ்க்கையில் பெரியளவில் வருவதற்க்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். பெரிய அளவில செய்யவேண்டும் என்று முயற்சி செய்வார்கள் ஆனால் அந்த முயற்சி தோல்வியை தழுவும் நிலை ஏற்படலாம். ஒரு தோல்வி ஏற்பட்டால் பரவாயில்லை எடுக்கும் முயற்சி அனைத்தும் தோல்வியை தழுவினால் அது பெரிய பாதிப்பை தரும் என்பதால் இந்த ஜாதகர்கள் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

மூன்றாவது வீடு பாதிப்படைந்த ஆட்களுக்கு இயற்கை அவர்களுக்கு ஒத்துழைப்பது இல்லை. உப்பு விற்றால் மழை வருகின்றது  மாவு விற்றால் புயல் வருகின்றது என்பது போலவே செயல் இருக்கும். இயற்கையே இவர்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதை பல ஜாதகர்களுக்கு நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன். ஜாதகத்தில் உள்ள கிரகங்களும் இயற்கை தானே அதனால் இயற்கையும் ஒத்துழைப்பது கிடையாது.

ஜாதக கதம்பத்தில் தினமும் இருபதிவுகளையாவது தாருங்கள் என்று நண்பர்கள் கேட்டுள்ளனர். அனைவரின் வேண்டுகோளை ஏற்று தினமும் இருபதிவுகளை தருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: