Followers

Monday, April 8, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          மூன்றாவது வீட்டைப்பற்றி எழுதியவுடன் பலர் தங்களின் ஜாதகத்தை அனுப்பியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் நான் கூப்பிட்டு பேசுகிறேன். நிறைய பேருக்கு மூன்றாவது வீடு பாதிப்படைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன். 

உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மீகவாதிகளுக்கும் மூன்றாவது வீடு கெட்டு போயிருக்கும். ஒருவரை போட்டு அலைக்கழிக்க செய்யவைப்பது மூன்றாவது வீடாக தான் இருக்கும். ஊர் ஊராக சுற்றினாலும் ஒன்றுமே அவர்களுக்கு ஆகாது என்ற ரீதியில் சுற்ற வைக்கும்.

பெரும்பாலான சாமியார்கள் ஊர் ஊராக அலைந்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் மூன்றாவது வீடு கெட்டதால் தான் இந்த நிலை என்பது சோதிடம் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கும் அவர்களுக்கு எல்லாம் மூன்றாவது வீடு கெட்டு போயிருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் ஆனாலும் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் இது எல்லாம் மூன்றாவது வீட்டால் வந்து வினை என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது வீடு கெட்டு போயிருக்கின்றது என்பதை அறிய முதல் டெஸ்ட உங்களை அலைக்கழிப்பது அதன் வேலை அடுத்தது உங்களின் காது ஏதாவது ஒரு அரிப்பு ஏற்பட்டு பட்ஸ் வைத்து நோண்டிக்கொண்டே இருக்க வைக்கும் இது ஒரு சாதாரண உதாரணமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: