Followers

Monday, April 29, 2019

தைரியத்தை கொடுக்கும் ரோல்மாடல் மற்றும் வழிபாடு


வணக்கம் !
          தற்பொழுது நாம் மூன்றாவது வீட்டைபற்றி பார்த்து வருகிறோம். மூன்றாவது வீடு என்பது நம்மிடம் இருக்கும் தைரியத்தை காட்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. தைரியம் இருந்தால் தான் எந்த வேலையும் ஒருவர் செய்ய முடியும். 
துணிச்சலாக செய்யும் செயல் பல தடவை உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தைரியம் இல்லாதவர்கள் கூட தைரியத்தை வரவழைக்க அவர்கள் தைரியமான தெய்வத்தை வணங்கி தைரியத்தை பெறுவார்கள் என்று நாம் பார்த்து இருக்கிறோம்.

என்னுடைய அனுபவத்தை உங்களிடம் சொல்லுகிறேன். நான் பெரும்பாலும் புத்தகங்களை படித்து தைரியத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே உங்களிடம் சொல்லிருக்கிறேன் ஒரு மனிதன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதைப்பற்றி எல்லாம் நமக்கு தேவையில்லை அவர்களிடம் இருக்கும் கருத்து நல்ல விசயங்களை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். 

ஹிட்லர் புத்தகத்தை எல்லாம் படித்து நம்முடைய சுயதன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும் தனிமனிதனின் முன்னேற்றத்திற்க்கு அவரின் வாழ்க்கையை நாம் பாடமாக கூட எடுத்துக்கொள்ளலாம். ஒரு தனிமனிதனாக அவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும். இந்த தைரியத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஹிட்லரின் தைரியத்தை எடுத்துக்கொண்டு நாம் இந்த காலக்கட்டத்தில் சண்டைக்கு செல்லவேண்டியதில்லை. பல வேலைகளில் இந்த தைரியத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொண்டு செயல்படும்பொழுது மூன்றாவது வீடு தைரியமாக செயல்பட்டு நமக்கு நல்லவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.

பலருக்கு மனத்திற்க்குள் தயக்கமாக செயல்பட்ட காரணத்தால் தான் பல இடங்களில் வெற்றி பெறாமல் அதாவது வாய்ப்பை கைநழுவிவிடுவார்கள். உங்களின் வாழ்க்கையிலும் இது நடந்திருக்கும் மனதிற்க்குள் உள்ள தயக்கத்தால் பல நல்ல வாய்ப்புகளை நீங்கள் இழந்தது பல ஆயிரம் வாய்ப்புகளாக இருக்கும்.

தைரியமாக செயல்படுவதற்க்கு ஒரு போர்வீரனை ஒரு ரோல் மாடலாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்பதற்க்காக ஹிட்லரை பற்றி சொன்னேன். நீங்கள் வழிபாடு போல ஒன்றை செய்து நீங்கள் வரவேண்டும் என்றால் காளி தேவியை வணங்கி வரலாம். செவ்வாய்க்குரிய முருகனையும் வணங்கி வரலாம்.


பொதுவாக நான் ஆன்மீக வழியில் ஒரு போர்வீரன் இருந்து அவன் எந்தளவுக்கு தைரியத்தோடு செயல்பட்டு அவன் வெற்றி பெற்று இருக்கிறான் என்று தேடி படித்தது உண்டு. ஆன்மீகத்தை துணைக்கொண்டு மற்றும் தைரியத்தோடு அவர்கள் எப்படி செயல்பட்டார்கள். ஆன்மீகத்தை பயன்படுத்தியதால் அவர்கள் இந்த உலகம் இருக்கும் வரை எப்படி பெயர் வாங்கி இருக்கின்றனர் என்று தேடி அலைந்தது கூட உண்டு. நிறைய புத்தங்களையும் படித்து எப்படி ஆன்மீகத்தை பயன்படுத்தினார்கள் என்றும் படித்து இருக்கிறேன். 

நாளை உங்களுக்கு மூன்றாவது வீட்டோடு சம்பந்தப்பட்ட நல்ல தைரியமான ஒரு போர்வீரன் இன்றளவும் பேசப்படுகின்ற ஆள். சிறந்த ஆன்மீகவாதியாகவும் அவர் இருந்திருக்கிறார் அவரைப்பற்றி படித்த விசயத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: