Followers

Tuesday, April 30, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          ஒரு தலைமுறை உழைத்து பல விசயங்களை கற்றுக்கொண்டுவிட்டால் அடுத்த தலைமுறைக்கு அந்த விசயங்களை எளிமையாக கொண்டு சென்றுவிடலாம். தற்பொழுது உள்ள தலைமுறைகள் தான் எளிதில் அனைத்தையும் கற்றுக்கொண்டு இருக்கின்றது. தொலைதொடர்பு சாதனங்கள் வழியாக எளிமையாக அனைத்தையும் தெரிந்துக்கொண்டு அதனை இளைய தலைமுறையினர்க்கு கொடுத்துவிடலாம்.

ஒரு பதினைந்து வருடத்திற்க்கு முன்பு இந்த வசதிகள் இருந்திருந்தால் பலரின் கர்மாவை அப்பொழுதே குறைத்து ஒரு நல்ல வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருக்கலாம். ஏன் பிரச்சினை வருகின்றது என்பதை அப்பொழுது நமக்கு தெரியவில்லை. தற்பொழுது தான் பலருக்கு சோதிடத்தில் வழியாக இதனை சரி செய்யமுடியும் என்பது தெரிய வருகின்றது.

நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் மூன்றாவது வீடு நமக்கு ஏற்படும் தொலைதொடர்பை காட்டக்கூடிய ஒரு இடமாக இருக்கின்றது. உங்களின் தொலைதொடர்பை காட்டக்கூடிய இடம் சரியாக இருந்தால் தான் நமக்கு அனைத்து தகவலும் வந்து சேரும்.

நீங்கள் நல்ல நிலையில் தகவல்களை நிறைய சேகரிக்க முடிகின்றது என்றால் உங்களின் மூன்றாவதுவீடு மிகச்சரியாக நல்ல முறையில் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றது என்று அர்த்தம்.  தகவல்களை சேகரிக்க உங்களின் மனம் விரும்பவில்லை என்றால் உங்களின் மூன்றாவது வீடு சரியில்லை என்று அர்த்தம்.

மனம் எதனை விரும்புகின்றது என்பதை பார்த்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம். நமக்கு எந்த வீடு மற்றும் எந்த கிரகம் வேலை செய்துக்கொண்டு இருக்கின்றது தெரியவரும். நாள் முழுவதும் செல்போனிலேயே காலத்தை போக்கிக்கொண்டு இருந்தாலும் உருப்படியாக தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படும் நபர்களுக்கு மட்டுமே மூன்றாவது வீடு மிகச்சரியாக வேலை செய்கின்றது அர்த்தம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: